இந்தியா

கூடுதலாக 4 ராமாயண யாத்திரை சிறப்பு ரயில்கள் இயக்க ஐஆர்சிடிசி முடிவு

ANI


புது தில்லி: ராமரின் வாழ்வியலோடு தொடர்புடைய இடங்களுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வரவும், கோயில்களை தரிசிக்கவும் கூடுதலாக 4 ராமாயண யாத்திரை சிறப்பு ரயில்களை இயக்க ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே இயங்கி வரும் ராமாயண யாத்திரை சிறப்பு ரயில்களுடன், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரயில்கள் நவம்பர் 7ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன. 

ஐஆர்சிடிசி வெளியிட்டிருக்கும் தகவலின்படி, இந்த நான்கு ரயில்களும் மதுரை, புணே, ஸ்ரீகங்காநகர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களிலிருந்து நவம்பர் முதல் ஜனவரி வரை இயக்கப்பட உள்ளன.

முதல் ரயில் நவம்பர் 16ஆம் தேதியும், 2வது மற்றும் மூன்றாவது ரயில்கள் முறையே நவம்பர் 25ஆம் தேதி, நவம்பர் 27ஆம் தேதியிலும், நான்காவது ரயில் ஜனவரி 20ஆம் தேதியிலும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT