இந்தியா

ஹிமாசலில் பயணிகள் ரயில் தடம்புரண்டது

DIN

ஹிமாசலில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 

ஹிமாசலில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பரோக் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கற்கள் விழுந்து கிடந்தன.

இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக வந்த கல்கா-சிம்லா பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 

இந்த சம்பவத்தின்போது ரயிலில் 9 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் அவர்களில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹிமாசலில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT