முகப்பு
இந்தியா

சொந்த நலன்களுக்கு ஆப்கனைப் பயன்படுத்தக் கூடாது: பிரதமர் மோடி

எந்தவொரு நாடும் தங்களது சொந்த நலன்களுக்காக ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்தியா

சொந்த நலன்களுக்கு ஆப்கனைப் பயன்படுத்தக் கூடாது: பிரதமர் மோடி

எந்தவொரு நாடும் தங்களது சொந்த நலன்களுக்காக ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் தெரிவித்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:


எந்தவொரு நாடும் தங்களது சொந்த நலன்களுக்காக ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் தெரிவித்தார்.

"பயங்கரவாதத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வரும் பிற்போக்குத்தன சிந்தனைகளைக் கொண்ட நாடுகள், பயங்கரவாதம் அவர்களுக்குமேகூட பெரிய அச்சுறுத்தல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பயங்கரவாதத்தைப் பரப்பும் இடமாகவோ, பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான இடமாகவோ ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழலை எந்தவொரு நாடும் தங்களது சொந்த நலன்களுக்காக சாதகமாக்கிக்கொள்ளக் கூடாது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினருக்கு உதவிகள் தேவை. அவர்களுக்கு உதவிகளை வழங்குவது நமது கடமை" என்றார் பிரதமர் மோடி.

முழு கட்டுரையைப் படிக்க →