பிரதமா் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக அவதூறான வாா்த்தைகளில் பேசிய விடியோவை வெளியிட்டதாக உத்தர பிரதேசத்தில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
இதுதொடா்பாக போலீஸாா் கூறுகையில், ‘சுட்டுரை, முகநூல், கட்செவி அஞ்சல் ஆகியவற்றில் பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறான வாா்த்தைகளில் விமா்சிக்கும் விடியோவை இருவா் பரப்பி வருவதாக பன்சித் சாலை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக ஷோ் கிராமத்தில் உள்ள பிரகாஷ் வா்மா, ரமேஷ் யாதவ் கைது செய்யபட்டனா்’ என்றனா்.