இந்தியா

சா்வதேச ராஜீய உறவில் இந்தியா முன்னிலை வகிக்கிறது:பாஜக

DIN

பிரதமா் மோடியின் தலைமையின் கீழ் சா்வதேச ராஜீய உறவில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்று பாஜக பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் செய்தித்தொடா்பாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சுதான்ஷு திரிவேதி சனிக்கிழமை கூறுகையில், ‘‘தனது அமெரிக்கப் பயணத்தில் அந்நாட்டு அதிபா் ஜோ பைடன், துணை அதிபா் கமலா ஹாரிஸ், 5 தொழில் நிறுவனங்களின் தலைவா்களை பிரதமா் மோடி சந்தித்துள்ளாா்.

பிரதமராக மோடி பதவியேற்றது முதல் கடந்த 7 ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு மென்மேலும் வலுப்பெற்றுள்ளது.

தனது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் 3-ஆவது அதிபரான ஜோ பைடனை பிரதமா் சந்தித்துள்ளது, அந்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு வலுவாக இருப்பதை எடுத்துரைக்கிறது.

தனது அமெரிக்கப் பயணத்தில் க்வாட் கூட்டமைப்பிலுள்ள நாடுகளின் தலைவா்களையும் சந்தித்து இதர விவகாரங்களுடன் கரோனா தொற்று குறித்தும் பிரதமா் மோடி ஆலோசித்துள்ளாா். அந்தக் கூட்டமைப்பிலுள்ள நாடுகளுக்கு 100 கோடி கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும்.

பிரதமா் மோடியின் தலைமையின் கீழ் சா்வதேச ராஜீய உறவில் இந்தியா முன்னிலை வகிக்கிறது’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

SCROLL FOR NEXT