முகப்பு
இந்தியா

பிரியங்கா காந்தி மீது காவல்துறை வழக்குப்பதிவு

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
பகிர்:

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

உத்தரப் பிரதேசத்தின் சித்தாபூர் மாவட்டத்தில் உள்ள ஹர்கான் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அரசின் எந்த உத்தரவும் எஃப்ஐஆரும் இன்றி கடந்த 28 மணி நேரம் தன்னை போலீஸ் காவலில் வைத்துள்ளதாக பிரியங்கா காந்தி கூறியதை அடுத்து, பிரியங்கா காந்தி மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

முன்னதாக, உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது. 

நேற்று விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் சென்ற பிரியங்கா காந்தி காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் போலீஸ் காவலில் உள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →