முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 4,313 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 4,313 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 4,313 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,313 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,77,987ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 92 பேர் பலியானார்கள். 
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,37,643ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 50,466 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 4,360 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 62,86,345ஆக உயர்ந்துள்ளது. 

மாநிலத்தில் இன்று 1,60,481 மாதிரிகளும், இதுவரை  5,44,87,950 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 2,98,098 வீடுகளிலும், 1,954 நிறுவனங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.