முகப்பு
இந்தியா

சைத்ர நவராத்திரி: வட மாநிலங்களில் கோலாகல கொண்டாட்டம் (புகைப்படங்கள்)

சைத்ர நவராத்திரி திருவிழாவின் முதல் நாளான இன்று வட மாநிலங்களில் உள்ள மக்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:51 AM
அமிர்தசரஸில் உள்ள மாதா லோங்காவாலி தேவி கோயிலில் பிரார்த்தனை செய்யும் பக்தர்கள்
பகிர்:


சைத்ர நவராத்திரி திருவிழாவின் முதல் நாளான இன்று வட மாநிலங்களில் உள்ள மக்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக பொது வழிபாடுகளில் ஈடுபட மக்களுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சைத்ர நவராத்திரியான இன்று அனைத்து கோயில்களிலும் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலை முதல் கோயில்களில் அலை அலையாய் திரண்டு வருகின்றனர். 

வடமாநிலத்தில் சைத்ர நவராத்திரி கொண்டாட்ட புகைப்படங்கள் 

பிரயாக்ராஜில் உள்ள கோயிலில் சைத்ர நவராத்திரியின் முதல் நாளில் பிரார்த்தனை செய்ய காத்திருந்த பக்தர்கள்
பாட்னாவில் சைத்ர நவராத்தியில் முதல் நாள் ஊர்வலத்தில் கலந்துகொண்ட பக்தர்கள்
மொரதாபாத் நகரில் சைத்ர நவராத்திரியின் முதல்நாளில்  சூரிய பூஜை செய்யும் பக்தர்கள்
மொரதாபாத்தில் சைத்ர நவராத்திரியை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்யக் கூட்டம் கூட்டமாக வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
பாட்னாவில் சைத்ர நவராத்திரியின் முதல் நாளில் வழிபாடு செய்யும் பக்தர்கள்
கத்ராவில் சைத்ர நவராத்திரியை முன்னிட்டு மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள்
பிராயக்ராஜில் உள்ள கோயிலில் சைத்ர நவராத்திரியின் முதல் நாளில் பிரார்த்தனை செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்கள் 
புதுதில்லியில் நவராத்திரியை முன்னிட்டு ஜண்டேவாலன் கோயில் மின் விளக்குகளால் ஜொலித்தது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.