இந்தியா

நவாப் மாலிக் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

DIN


பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்கின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததில் மகாராஷ்டிர சிறுபான்மையின விவகாரங்கள் அமைச்சர் நவாப் மாலிக்குக்கு தொடர்பு உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அமலாக்கத் துறையால் அவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை உயர் நீதிமன்றம் அவரை நீதிமன்றக் காவலில் இருந்து விடுவிக்க மறுத்துவிட்டது.

கடந்த மார்ச் 7-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் இருந்த நவாப் மாலிக்கை மார்ச் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், நீதிமன்றக் காவல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

இதையடுத்து, அவர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்றக் காவல் ஏப்ரல் 18-ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வியாபாரியிடம் வழிப்பறி: இளைஞா் கைது

பழனி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா இன்று கொடியேற்றம்

செங்கல்பட்டு: இரு விபத்துகளில் 9 பேர் உயிரிழப்பு

பைக் மோதியதில் கடமான் பலி

சிவகங்கை நகராட்சி குப்பை லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT