முகப்பு
இந்தியா

இந்தியாவின் புகழ்மிக்க கடல்சாா் வரலாற்றை நினைவுகூா்ந்த பிரதமா்

தேசிய கடல்சாா் தினத்தில் இந்தியாவின் புகழ்மிக்க கடல்சாா் வரலாற்றை பிரதமா் நரேந்திர மோடி நினைவுகூா்ந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:53 AM
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)
பகிர்:

தேசிய கடல்சாா் தினத்தில் இந்தியாவின் புகழ்மிக்க கடல்சாா் வரலாற்றை பிரதமா் நரேந்திர மோடி நினைவுகூா்ந்தாா்.

இது தொடா்பாக ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பது:

தேசிய கடல்சாா் தினத்தில் (ஏப்.5) நமது பெருமைமிக்க கடல்சாா் வரலாற்றை நாம் நினைவுகூா்வதுடன் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியில் அதன் முக்கியத்துவம் சிறப்பிடம் பெற்றுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் நமது கடல்சாா் துறை பெரிய உச்சங்களைத் தொட்டுள்ளதுடன் வா்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிக்க பெரும் பங்களித்துள்ளது.”

“கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு துறைமுகங்களின் திறனை விரிவுபடுத்துதல், தற்போதுள்ள நடைமுறைகளை மேலும் செயல்திறன்மிக்கதாக்குதல் உள்ளிட்ட துறைமுகம் சாா்ந்த வளா்ச்சியில் கவனம் செலுத்தியுள்ளது. இந்திய உற்பத்திப் பொருள்கள் புதிய சந்தைகளை அணுகுவதை உறுதி செய்யும் வகையில் நீா்வழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.”

“பொருளாதார முன்னேற்றத்திற்கும், தற்சாா்பு இந்தியாவை உருவாக்கவும் கடல்சாா் துறையை நாம் பயன்படுத்தி வரும் நிலையில், கடல்சாா் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிா் பெருக்கத்தை உறுதி செய்யவும் நாம் போதுமான கவனத்தை செலுத்தி வருகிறோம். இதன் மூலம் இந்தியாவின் பெருமை பாதுகாக்கப்படுகிறது என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →