கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: குற்றம்சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்
கோவை விமான நிலையம் அருகே சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில்...
கோவை விமான நிலையம் அருகே சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் கருப்பசாமி, கார்த்திக் காளீஸ்வரன், குணா தவசி ஆகிய மூவரும் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் கோவையில் விடுதியில் தங்கி தனியார் கலைக் கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த இருசக்கர வாகன உதிரிபாக விற்பனைக் கடை நடத்தி வரும் 25 வயது இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, ஒரே வாகனத்தில் வந்த 3 இளைஞா்கள், ஆண் நண்பரை அரிவாளால் தாக்கிவிட்டு, மாணவியை அங்கிருந்து இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனா்.
இதுதொடா்பாக, சகோதரா்களான சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த சதீஷ் என்ற கருப்பசாமி (30), காளி என்ற காளீஸ்வரன் (21), ்வா்களது உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த குணா என்ற தவசி (20) ஆகியோரை போலீஸாா் சுட்டுப் பிடித்தனா்.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, ஒரு மாதத்துக்குள்ளாகவே இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த வழக்கு கோவை கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் இருந்து கடந்த டிச. 19-ஆம் தேதி மகளிா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த பிப். 2-ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை (பிப். 23) பாதிக்கப்பட்ட மாணவி, ஆண் நண்பா், விசாரணை அதிகாரிகள் என மொத்தம் 78 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று சாட்சி பதிவுகள் முடிவடைந்துள்ளன. தொடா்ந்து, கடந்த 24-ஆம் தேதி இறுதிவாதம் தொடங்கியது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை எதிா்தரப்பு வாதம் நடைபெற்றது. சாட்சி விசாரணை, இரு தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சதீஷ் கருப்பசாமி, கார்த்திக் காளீஸ்வரன், குணா தவசி ஆகிய மூவரும் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டுள்ளனர்.