கோப்புப்படம் 
இந்தியா

ஆயுர்வேதம், யோகா ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்: இந்திய ஆயுர்வேத நிறுவனம்

ஆயுர்வேதமும், யோகாவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் தலைவர் தனுஜா நர்சி வியாழக்கிழமை தெரிவித்தார்.

DIN

புதுதில்லி: ஆயுர்வேதமும், யோகாவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் தலைவர் தனுஜா நர்சி வியாழக்கிழமை தெரிவித்தார்.

சர்வதேச யோகா தினத்திற்கு இன்னும் 75 நாள்கள் உள்ளன. யோகா தினத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

யோகா என்பது ஆயுர்வேதத்தின் ஆன்மீக முகம் மற்றும் ஆயுர்வேதம் என்பது யோகாவின் உடல் முகம். ஆயுர்வேதம், யோகா ஆகியவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று அவர் மேலும் கூறினார்.

யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், யோகாவை ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முறையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். ஒவ்வொருவரும் தினமும் காலையில் 35 நிமிடங்கள் யோகா செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

ஆயுர்வேதத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய பேசிய அவர், "இது ஒரு நபரின் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது. ஆயுர்வேதம் மருத்துவ விஞ்ஞானமோ அல்லது மூலிகை விஞ்ஞானமோ அல்ல, ஆனால் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை வாழ்வதற்கான ஒரு வழியாகும். யோகாவை பின்பற்றுவதன் மூலம் நோய்கள் பலவற்றைத் தவிர்க்கலாம்" என்று கூறினார்

மாறும் பருவங்களுக்கு ஏற்ப நமது உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டுவருவது பற்றியும் ஆயுர்வேதம் கூறுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

பொங்கல் திருநாள்: சிறப்புப் பேருந்துகள் முன்பதிவு விவரம்!

தொடர் மழை, வெள்ளம்! தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட சாலைகள் மற்றும் வீடுகள்!

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT