முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் இன்று நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் இன்று நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்ட பயங்கரவாதி லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர் என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

பயங்கரவாதியிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →