ஜோ பைடன் / நரேந்திர மோடி 
இந்தியா

மோடியுடன் நாளை பைடன் ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி வாயிலாக நாளை (ஏப்ரல் 11) ஆலோசனை நடத்தவுள்ளார். 

DIN


பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி வாயிலாக நாளை (ஏப்ரல் 11) ஆலோசனை நடத்தவுள்ளார். 

இந்த ஆலோசனையில் இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்தும், சர்வதேச அளவிலான இருதரப்பு கூட்டு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.

மேலும், இருதரப்பு ஒத்துழைப்பு, தெற்காசியா மற்றும் இந்தோ பசுபிக் பிராந்தியங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், சர்வதேச பிரச்னைகளில் இருதரப்பு நிலைப்பாடு குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. 

ரஷியாவில் எரிபொருள் வாங்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு மேற்கு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி பைடனுடன் விவாதிக்கவுள்ளதால், இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக!

வீட்டிலிருந்து கருகிய வாசனை வெளியேற யோசனை!

திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!

காமாட்சி அம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

உலகம் முழுவதும் பாம்புக்கடி விஷ மருந்து கிடைக்க தமிழக இருளா் இன மக்களே காரணம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

SCROLL FOR NEXT