ஜோ பைடன் / நரேந்திர மோடி 
இந்தியா

மோடியுடன் நாளை பைடன் ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி வாயிலாக நாளை (ஏப்ரல் 11) ஆலோசனை நடத்தவுள்ளார். 

DIN


பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி வாயிலாக நாளை (ஏப்ரல் 11) ஆலோசனை நடத்தவுள்ளார். 

இந்த ஆலோசனையில் இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்தும், சர்வதேச அளவிலான இருதரப்பு கூட்டு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.

மேலும், இருதரப்பு ஒத்துழைப்பு, தெற்காசியா மற்றும் இந்தோ பசுபிக் பிராந்தியங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், சர்வதேச பிரச்னைகளில் இருதரப்பு நிலைப்பாடு குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. 

ரஷியாவில் எரிபொருள் வாங்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு மேற்கு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி பைடனுடன் விவாதிக்கவுள்ளதால், இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் தரமாக இருக்கும்: கவின்

என்றும் என் கைகளில்..! ஹர்மன்ப்ரீத், ஸ்மிருதி மந்தனாவின் ‘ஸ்பெஷல்’ டாட்டூ!

சாலேட் ஹோட்டல் ஒருங்கிணைந்த லாபம் ரூ.154.81 கோடி!

2026ல் திமுக - தவெக இடையே மட்டும்தான் போட்டி: விஜய்

பிக் பாஸ் 9 பிராங்க்: முகத்திரை கிழிந்த போட்டியாளர்கள் - உள்ளத்தால் உயர்ந்த வினோத்!

SCROLL FOR NEXT