இந்தியா

மேற்கு தில்லியில் சிலிண்டர் வெடித்து விபத்து: 3 பேர் காயம்

DIN

மேற்கு தில்லியில் திங்கள்கிழமை பிற்பகல் சிலிண்டர் வெடித்ததில் ஒரு பெண் உட்பட 3 பேர் காயமடைந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், 

மதியம் 1.25 மணியளவில் சிலிண்டர் வெடிப்பு குறித்து தங்களுக்கு அழைப்பு வந்தது. சம்பவ இடத்துக்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக விரைந்தன. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​ஜிதேந்தர் (40), ராகுல் (28), அனிதா (32) ஆகிய 3 பேர் ஏற்கனவே தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மதியம் 1.40 மணியளவில் நிலைமை கட்டுக்குள் வந்தது. மேலும் 3.10 மணியளவில் தீயணைப்பு வாகனங்கள் திரும்பின. சிறிய காயங்களுடன் காயமடைந்த மூவரின் நிலையும் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT