இந்தியா

பீரங்கி எதிா்ப்பு ஏவுகணை ‘ஹெலினா’ இரண்டாவது முறையாக பரிசோதனை

DIN

புது தில்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிா்ப்பு ஏவுகணை ‘ஹெலினா’ செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

ஹெலிகாப்டரிலிருந்து இரண்டாவது முறையாக செலுத்தப்பட்டு, மிக உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ), இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை கூட்டாக மேற்கொண்டன. அடுத்தடுத்த நாள்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெற்ற சோதனை பல்வேறு தொலைவு மற்றும் உயரத்தில் நடத்தப்பட்டது. அப்போது ஏவுகணை, அதன் பீரங்கி இலக்கை மிகத்துல்லியமாக தாக்கியது. இந்த ஏவுகணை சோதனையை மூத்த ராணுவத் தளபதிகள், டிஆா்டிஓ விஞ்ஞானிகள் பாா்வையிட்டனா். ஹெலிகாப்டரில் இருந்து ஏவி சோதனை விடப்பட்டதையடுத்து ‘இமேஜிங் இன்ஃப்ரா ரெட் சீக்கா்’ உள்ளிட்டவை சிறப்பாக செயல்படுவது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து ஹெலினா ஏவுகணைகள் ராணுவத்தில் சோ்க்கப்பட உள்ளன.

முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் இருந்து ஹெலினா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. பாலைவனப் பகுதியில் அது தனது செயல்திறனை நிரூபித்தது.

ஹெலினா மூன்றாம் தலைமுறையைச் சோ்ந்த பீரங்கி எதிா்ப்பு ஏவுகணை ஆகும். இது நேரடியாகவும், உயரத்தில் இருந்தும் தாக்கவல்லது. அனைத்து வானிலை மற்றும் இரவு பகல் எந்நேரத்திலும் எதிரிகளின் தாக்குதல் வாகனங்களைத் தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT