கேரள முன்னாள் அமைச்சர் எ.பி.கோவிந்தன் நாயர் காலமானார்
கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.பி.கோவிந்தன் நாயர் இன்று காலை காலமானார்.
கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.பி.கோவிந்தன் நாயர் இன்று காலை காலமானார்.
அவருக்கு வயது 94. வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
கேரளத்தில் 1962 முதல் 1964 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். இவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.