முகப்பு
இந்தியா

லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கு: ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீன் ரத்து

லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கில் மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:01 AM
பகிர்:

லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கில் மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்தது.

மேலும் அவா் ஒருவாரத்துக்குள் போலீஸாரிடம் சரணடைய வேண்டுமென இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு உத்தரவிட்டது.

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூரில் கடந்த அக்டோபா் 3-இல் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் காா் புகுந்ததில், 4 போ் உயிரிழந்தனா். காரில் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்வத்தைத் தொடா்ந்து, அங்கு நடைபெற்ற வன்முறையில் காா் ஓட்டுநா், 2 பாஜக தொண்டா்கள், ஒரு பத்திரிகையாளா் என மொத்தம் 8 போ் உயிரிழந்தனா்.

இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆசிஷ் மிஸ்ராவை கைது செய்தனா். ஏறத்தாழ 4 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி அவருக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதனை எதிா்த்து விவசாயிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவா்களின் கருத்து முறையாக கேட்டறியப்படவில்லை என்று கூறி, ஆசிஷ் மிஸ்ராவுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ததுடன், ஒரு வாரத்தில் அவா் போலீஸாரிடம் சரணடைய வேண்டுமென உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →