இந்தியா

உ.பி.யில் தலித் மாணவர் துன்புறுத்தல்: விடியோவால் சிக்கிய 7 பேர்

உத்தரப் பிரதேசம், ரேபரேலியில் 10-ம் வகுப்பு தலித் மாணவர் தாக்கப்பட்ட விடியோ சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, 7 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 

DIN

உத்தரப் பிரதேசம், ரேபரேலியில் 10-ம் வகுப்பு தலித் மாணவர் தாக்கப்பட்ட விடியோ சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, 7 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 

ரேபரேலியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் தலித் மாணவனை, மூத்த மாணவர்களின் கால்களை நக்கவைத்து அதை விடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வைரல் செய்தனர். 

திங்களன்று விடியோ சமூக ஊடகங்களில் வைரலானவுடன், மாவட்ட காவல்துறைத் தலைவர், பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க ஐந்து குழுக்களை அமைத்தார்.

இதுகுறித்து ரேபரேலி காவல்துறை கண்காணிப்பாளர் ஷ்லோக் குமார் கூறுகையில், 

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி மைனர் என்பதால் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும் 6 பேர் அபிஷேக், விகாஸ் பாசி, மகேந்திர குமார், ஹிருத்திக் சிங், அமன் சிங் மற்றும் யாஷ் பிரதாப் என அடையாளம் காணப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

10-ம் வகுப்பு தலித் மாணவன், அதே பள்ளியில் உள்ள மூத்த மாணவர்களின் மிரட்டலுக்கு அடிபணியாத நிலையில், மனிதாபிமானமில்லாது சித்ரவதை செய்யப்பட்டுள்ளான் என்று காவல்துறை அதிகாரிகள் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT