கோப்புப்படம் 
இந்தியா

கோவாவில் முகக்கவசம் அணிய, கரோனா விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தல்

கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மக்கள் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கோவா அரசு தெரிவித்துள்ளது. 

DIN

கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மக்கள் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கோவா அரசு தெரிவித்துள்ளது. 

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையொட்டி அனைத்து மாநிலங்களும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில் கோவா சுகாதாரத்துறை இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள தகவலில், 'கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், பொது இடங்களில் அனைத்து கரோனா பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பிரமோத் சாவந்த், கோவாவில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

கோவாவில் தற்போது 27பேர்  கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமரின் சகோதரியின் மீது முட்டை வீச்சு!

ஓணம் ரெடி... ஐஸ்வர்யா மேனன்!

தமிழ்நாட்டிற்கு ரூ. 13,016 கோடி முதலீடு ஈர்ப்பு! | செய்திகள்: சில வரிகளில் | 5.9.25

ஒளிவீசும் நிலா... ஐஸ்வர்யா லட்சுமி!

Madharasi review - கஜினி பாணியில் சிவகார்த்திகேயன்! அமரனை வெல்லுமா Madharasi? திரை விமர்சனம்

SCROLL FOR NEXT