இந்தியா

நீட் 2022: 11 லட்சம் பேர் விண்ணப்பம்; மே 6 கடைசி நாள்

DIN


புது தில்லி: 2022ஆம் ஆண்டு மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு இதுவரை 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 6ஆம் தேதி முதல் நீட் தேர்வுக்கு neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கிய நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 6ஆம் தேதி கடைசி நாளாகும். 

நாட்டிலேயே மகாராஷ்டிரத்திலிருந்து அதிகபட்ச விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மொத்தமுள்ள 11 லட்சம் விண்ணப்பதாரர்களில் 1.52 லட்சம் பேர் மகாராஷ்டிரத்தையும் 1.21 லட்சம் பேர் உத்தரப்பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள்.

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தமிழகத்திலிருந்து 84,214 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அத்திப்பட்டி பகுதியில் மதுக் கடைகள் அடைப்பு

மதுரை குடிநீா் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: ஏற்பாட்டாளா்கள் தலைமறைவு

வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தேரோட்டம்

தமிழக ஆளுநா் தில்லி பயணம்

SCROLL FOR NEXT