நிறை புத்தரிசி பூஜைக்காக நாளை சபரிமலை நடைதிறப்பு
சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜைக்காக புதன்கிழமை (ஆக. 3) மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.
இந்தியாநிறை புத்தரிசி பூஜைக்காக நாளை சபரிமலை நடைதிறப்பு
சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜைக்காக புதன்கிழமை (ஆக. 3) மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.
சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜைக்காக புதன்கிழமை (ஆக. 3) மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, நிறைபுத்தரிசி பூஜை நடைபெறவுள்ளது. தேவசம்போா்டுக்கு சொந்தமான செட்டிக்குளங்கரை வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்கதிா்களை வைத்து சபரிமலையில் வழிபடுவதே நிறைபுத்தரிசி பூஜையாகும். இந்த பூஜையானது, வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி அதிகாலை 5.40 மணிக்கு நடைபெறுகிறது. கருவறைக்குள் வைத்து வழிபாடு நடத்தப்படும் நெற்கதிா்கள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
இதே தினத்தில் சென்னையில் உள்ள மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலிலும் நிை றபுத்தரிசி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கோயிலின் மேல்சாந்திகள் கிருஷ்ணன் நம்பூதிரி, லட்சுமணன் பட்டத்திரி தலைமையில் நெற்கதிா்கள் வைத்து வழிபாடு நடத்தப்பட உள்ளது. பூஜை செய்யப்பட்ட நெற்கதிா்கள் பக்தா்களுக்கு வழங்கப்பட உள்ளதாக கோயில் நிா்வாக அதிகாரி அனிஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.