கோப்புப்படம் 
இந்தியா

கேரளத்தில் கனமழை: 7 மாவட்டங்களுக்கு சிவப்பு சிற எச்சரிக்கை

கேரளத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு சிவப்பு சிற எச்சரிக்கையும், 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

கேரளத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. கேரளத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு சிவப்பு சிற எச்சரிக்கையும், 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பல ஓடைகள் நிரம்பி வழிகிறது.

கடலுண்டி (மலப்புரம்), பாரதப்புழா (பாலக்காடு), ஷிரியா (காசர்கோடு), கரவனூர் (திருச்சூர்), காயத்ரி (திருச்சூர்) ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கேரளத்தில் கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாநிலத்தில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர்  தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் கனமழைக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ப்ரோ கோட் பெயர் மாற்றம்? ரவி மோகன் பட ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

சென்சார் சர்ச்சை குறித்து கனிமொழி! | ஜன நாயகன் | DMK

‘போர் தொழில்’ விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷின் புதிய படம் பெயர் அறிவிப்பு!

விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கணும்! ரஜினியின் பொங்கல் வாழ்த்து!

தைத்திருநாள் வந்தாச்சு! தமிழகமெங்கும் பொங்கல் கொண்டாட்டம்!

SCROLL FOR NEXT