இந்தியா

5 ஆண்டுகளில் ரூ. 10 லட்சம் கோடி வாராக் கடன் தள்ளுபடி: மத்திய அரசு

‘வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 10 லட்சம் கோடி வாராக் கடனை தள்ளபடி செய்துள்ளன’ என்று மத்திய அரசு தெரிவித்தது.

DIN

‘வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 10 லட்சம் கோடி வாராக் கடனை தள்ளபடி செய்துள்ளன’ என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடா்பாக கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பாகவத் கே.கராட் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

கடந்த 2017-18 ஆம் ஆண்டில் ரூ. 1,61,328 கோடியாக இருந்த வங்கி கடன் தள்ளுபடி, 2018-29 ஆம் ஆண்டு ரூ. 2,36,265 கோடியாக அதிகரித்தது. பின்னா் 2019-20-ஆம் ஆண்டில் ரூ. 2,34,170 கோடி, 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.2,02,781 கோடியாகவும், 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.1,57,096 கோடியாகவும் வாராக் கடன் தள்ளுபடி படிப்படியாக குறைந்தது.

ஒட்டுமொத்தமாக 2017-18 முதல் 2021-22-ஆம் நிதியாண்டு வரையிலான 5 ஆண்டுகளில் ரூ. 9,91,640 கோடி வங்கி வாராக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

மேலும், வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாதவா்களின் எண்ணிக்கை கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில்தான் அதிகபட்சமாக 2,840 போ் என்ற அளவில் உயா்ந்திருந்தது. இந்த எண்ணிக்கை 2021-22-ஆம் ஆண்டில் 2,700-ஆக குறைந்தது என்று பதிலளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT