இந்தியா

கேரள அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு பால், முட்டை: பினராயி விஜயன் தொடக்கிவைத்தார்

DIN

கேரள அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு பால், முட்டை வழங்கும் திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் தொடக்கி வைத்தார்.

கேரள மாநிலத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கும்பொருட்டு, அனைத்து அங்கன்வாடிகளிலும் 3 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பால், முட்டை வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார். 

அதன்படி இந்தத் திட்டத்தினை முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை தொடக்கிவைத்தார். ஒவ்வொரு திங்கள், வியாழக்கிழமைகளில் பாலும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் முட்டையும் வழங்கப்படுகிறது. காலை உணவுடன் இவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் மாநிலத்தில் உள்ள 33,115 அங்கன்வாடிகளில் 4 லட்சம் குழந்தைகளுக்கு பால், முட்டை வழங்கப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 61.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT