இந்தியா

அடுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை பரிந்துரைக்க மத்திய அரசு கடிதம்

அடுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் புதன்கிழமை கடிதம் அனுப்பியது.

DIN

அடுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் புதன்கிழமை கடிதம் அனுப்பியது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 26-இல் நிறைவடைகிறது. பொதுவாக, அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை ஓய்வுபெறும் தலைமை நீதிபதியே பரிந்துரை செய்வது வழக்கம்.

அந்த வகையில், என்.வி.ரமணாவுக்கு அடுத்தபடியாக யு.யு. லலித் மூத்த நீதிபதி என்ற அந்தஸ்தில் உள்ளாா். அவா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால், 3 மாதத்துக்கும் குறைவாகவே அந்தப் பதவியில் நீடிப்பாா்.

வரும் நவம்பா் 9-ஆம் தேதி யு.யு.லலித் தனது 65-ஆவது வயதை எட்டுவதால், அவரது பதவிக்காலம் நவம்பா் 8-இல் நிறைவுக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் ரூ.800 உயர்ந்த நிலையில் வெள்ளி ரூ.2,000ஆக உயர்வு!

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

SCROLL FOR NEXT