இந்தியா

அடுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை பரிந்துரைக்க மத்திய அரசு கடிதம்

DIN

அடுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் புதன்கிழமை கடிதம் அனுப்பியது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 26-இல் நிறைவடைகிறது. பொதுவாக, அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை ஓய்வுபெறும் தலைமை நீதிபதியே பரிந்துரை செய்வது வழக்கம்.

அந்த வகையில், என்.வி.ரமணாவுக்கு அடுத்தபடியாக யு.யு. லலித் மூத்த நீதிபதி என்ற அந்தஸ்தில் உள்ளாா். அவா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால், 3 மாதத்துக்கும் குறைவாகவே அந்தப் பதவியில் நீடிப்பாா்.

வரும் நவம்பா் 9-ஆம் தேதி யு.யு.லலித் தனது 65-ஆவது வயதை எட்டுவதால், அவரது பதவிக்காலம் நவம்பா் 8-இல் நிறைவுக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT