முகப்பு
இந்தியா

சோனியா காந்தி வீட்டின் முன் காவலர்கள் குவிப்பு

நேஷனல் ஹெரால்டு அலுவலகம் சீல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டின் முன் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:58 AM
பகிர்:

நேஷனல் ஹெரால்டு அலுவலகம் சீல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டின் முன் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தப்பட்டு நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகத்தைப் பூட்டி அமலாக்கத் துறையினர் சீல் வைத்தனர்.

‘வழக்கில் கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் நோக்கில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றவியல் பிரிவின் கீழ் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது’ என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், இன்று நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தில்லியில் சோனியா காந்தி வசித்து வரும் 10, ஜான்பத் இல்லத்திற்கு முன் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →