இந்தியா

குறைந்தபட்ச ஆதார விலையை மேம்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது: வேளாண் அமைச்சர்

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை மேம்பாடு குறித்து ஆலோசிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநில வேளாண் அமைச்சர் கைலாஷ் சௌத்ரி மாநிலங்களவையில் இன்று (ஆகஸ்ட் 5) தெரிவித்தார்.

DIN

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை மேம்பாடு குறித்து ஆலோசிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநில வேளாண் அமைச்சர் கைலாஷ் சௌத்ரி மாநிலங்களவையில் இன்று (ஆகஸ்ட் 5) தெரிவித்தார்.

இது குறித்து மாநிலங்களவையில் அவர் கூறியதாவது: “ இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது தொடர்பாக அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் விவசாயிகள் சார்பில் பிரதிநிதிகளும், மத்திய,மாநில அரசு அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு குறைந்தபட்ச ஆதார விலை குறித்து ஆலோசித்து அதன் ஆலோசனைகளை அரசுக்கு வழங்கும். இதன்மூலம் விவசாயிகள் பயனடைவர்.” என்றார்.

நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, விவசாயிகளின் உற்பத்தி விலையைக் காட்டிலும் குறைந்தபட்ச ஆதார விலையை 200 சதவிகிதம் அதிகரிக்க அரசிடம் ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக மாநில வேளாண் அமைச்சர் கைலாஷ் சௌத்ரி இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக கைலாஷ் சௌத்ரி மேலும் கூறியதாவது: “ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகை அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, 1.32 லட்சம் கோடி விவசாயத்திற்காக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2013-14ஆம் ஆண்டுகளில் வெறும் 27 ஆயிரம் கோடியாக இருந்த விவசாயத்திற்கான பட்ஜெட் தொகை இன்று 1.32 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. விவசாயத்திற்கு நிதி ஒதுக்குவதில் இந்தியா உலக நாடுகளில் முதல் பத்து இடங்களுக்குள் ஒன்றாக உள்ளது.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பறவை மோதியதால் தில்லியில் தரையிறங்கிய விமானம்!

சாதனை சதம் விளாசிய இங்கிலாந்து கேப்டன்; இலங்கைக்கு 254 ரன்கள் இலக்கு!

குழந்தைகள் உயிரிழப்பு எதிரொலி: சர்ச்சைக்குள்ளான இருமல் மருந்துக்கு தில்லி அரசு தடை!

கலைமாமணி விருதுபெற்ற கலைஞர்கள்!

ராகுலுக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும்..! - பிரசாந்த் கிஷோர் கறார்!

SCROLL FOR NEXT