இந்தியா

சாதி கலவரம்? 5 நாள்களுக்கு இணைய சேவை முடக்கம்

இளைஞர்களுக்கு தீ வைத்த விவகாரம் சாதிக் கலவரமாக மாறியதால், மேலும் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

DIN

மணிப்பூர் மாநிலத்தில் பதற்றமான சூழலைத் தவிர்க்கும் நோக்கத்தில் அடுத்த 5 நாள்களுக்கு இணைய சேவை முடக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

பிஷ்னுபூர் பகுதியில் வேன் ஒன்றுக்கு தீ வைத்ததில் 3 இளைஞர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இளைஞர்களுக்கு தீ வைத்த விவகாரம் சாதிக் கலவரமாக மாறியதால், மேலும் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாநில கூடுதல் தலைமை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெறுப்புணர்வை பரப்பும் வகையிலான செய்திகள் சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பப்படுகிறது. பிஷ்னுபூர் மாவட்டத்தில் நேற்று மாலை வேன் தீ வைக்கப்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிஷ்னுபூர் மாவட்டத்தில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால், அடுத்த 5 நாள்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT