இந்தியா

ரூ.6000 கோடி முறைகேடு செய்த பாஜக எம்.பி. சென்னை விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

போலி நிறுவனங்கள் பெயரில் கோடிக்கணக்கில்  ரூ.6000 கோடி அளவிற்கு முறைகேடு  செய்த பாஜக எம்.பி. சென்னை விரைவு சிறப்பு நீதிமன்றத்தில்  ஆஜரானார்.

DIN

சென்னை: போலி நிறுவனங்கள் பெயரில் கோடிக்கணக்கில்  ரூ.6000 கோடி அளவிற்கு முறைகேடு  செய்த பாஜக எம்.பி. சென்னை விரைவு சிறப்பு நீதிமன்றத்தில்  ஆஜரானார்.

ஆந்திர மாநிலம் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் சத்திய நாராயணா செளவுத்ரி என்கின்ற ஒய்.எஸ்.செளவுத்ரி. இவர் தற்போது பா.ஜ.க.,வில் எம்.பி.,யாக உள்ளார்.

இவர் கடந்த 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அமைச்சராக பதவி வகித்தார்.  இவர் தனது பதவி காலத்தில் பல்வேறு வங்கிகளில் முறைகேடாக கடன் பெற்று ஏமாற்றியதாக பல புகார்கள் எழுந்துள்ளது.

சுமார் 120-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சுஜானா குரூப் என்ற பெயரில் போலியாக துவங்கி சுமார் ரூ.6000 கோடி அளவிற்கு முறைக்கேடு செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தது.

இதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு இவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தியது. வங்கி கூட்டமைப்பிலிருந்து சுமார் ரூ.364 கோடி அளவிற்கு சுஜானா நிறுவனங்களின் பெயரில் கடன் பெற்று ஏமாற்றியது தெரியவந்துள்ளது

இதன் தொடர்ச்சியாக பல ஆவணங்கள் சிக்கியது. இது தொடர்பாக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம். தெலுங்கானா போன்ற மாநிலங்களில் நிறுவனங்கள் என்ற பெயரில் விளம்பர பலகை மட்டுமே வைத்து மோசடியில் ஈடுப்பட்டது அம்பலமானது. 

இதன் அடிப்படையில் சிபிஐ பதிவு செய்த வழக்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஒய்.எஸ்.செளவுத்ரி இன்று காலை ஆஜரானார். வழக்கு விசாரணை செய்த நீதிபதி ஆகஸ்ட் 26 ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT