செங்கோட்டையில் காற்றாடி பிடிப்பவர்களை நியமித்திருக்கும் காவல்துறை 
இந்தியா

செங்கோட்டையில் காற்றாடி பிடிப்பவர்களை நியமித்திருக்கும் காவல்துறை

வான்வழிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காற்றாடி பிடிப்பவர், காத்தாடி பறக்கவிடுபவர், ஜன்னல்வழியாக கண்காணிப்பாளர்களை தில்லி காவல்துறை நியமித்துள்ளது.

DIN

புது தில்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செங்கோட்டைப் பகுதியில் வான்வழிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காற்றாடி பிடிப்பவர், காற்றாடி பறக்கவிடுபவர், ஜன்னல்வழியாக கண்காணிப்பாளர்களை தில்லி காவல்துறை நியமித்துள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழாவின்போது செங்கோட்டைப் பகுதியில் காற்றாடி பறப்பதைத்தடுக்கவும், பலூன்கள் பறக்கவிடுதல், டிரோன்களை பறக்கவிடுதல் போன்ற ஆள்களின் துணையுடன் அல்லது துணையில்லாமல் வானத்தில் எந்த விதமான பொருள்களும் பறப்பதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

இதற்காக, காற்றாடி பறக்கவிடுபவர்கள், காற்றாடி பிடிப்பவர்கள், ஜன்னல் வழியாக கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வானில் எந்த விதமான பொருள் பறந்தாலும் தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மாஞ்சா நூல்கள் விற்பனை மற்றும் கண்ணாடி தூள் சேர்க்கப்பட்ட நூல்கள் விற்பனையும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தாவில் ரயில் நிலைய நடைமேடை கடையில் தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு

வெளியே வந்த கமருதீன்: ரசிகர்களுடன் நடனம் ஆடிய விடியோ வைரல்!

வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

மீன்பிடி படகு மீது மோதிய சுற்றுலா பயணிகள் படகு! இளம் பெண் பலி | Thailand

SCROLL FOR NEXT