முகப்பு
தமிழ்நாடு

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து....

Updated On : 10 மார்ச், 2026 at 3:11 AM
கோப்புப்படம் - படம்: DNS
பகிர்:

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கடைகளில் டீ, காபி விலை உயரும் என்று கூறப்படுகிறது.

சென்னை மணலியில் உள்ள ஐ.ஓ.சி. சிலிண்டர் நிரப்பும் நிறுவனத்தில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், வணிகப் பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவகங்கள், தேநீர் கடைகள் மூடும் நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது.

Advertisement

அதேபோல, கடைகளில் டீ, காபி விலையும் உயரும் சூழல் உருவாகும் என்று கடை உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள விவகாரத்தில், மத்திய அரசு தலையிட வேண்டும் என்று ஹோட்டல் மற்றும் உணவக கூட்டமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது உணவகத் தொழிலிலும், உணவு விநியோகத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்திருப்பது, ஹோட்டல்கள், உணவக உரிமையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

summary

It is said that the prices of tea and coffee in shops will increase due to the shortage of cooking gas cylinders for commercial use.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments