இந்தியா

பிகார்: மனித சங்கிலியால் இந்திய வரைபடத்தை உருவாக்கி மாணவர்கள் சாதனை

பிகார் மாநிலத்தின் பக்ஸார் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இன்று (ஆகஸ்ட் 14)  மனித சங்கிலியால் 75 மீட்டர் நீளமுள்ள இந்திய வரைபடத்தினை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர். 

DIN

பிகார் மாநிலத்தின் பக்ஸார் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இன்று (ஆகஸ்ட் 14)  மனித சங்கிலியால் 75 மீட்டர் நீளமுள்ள இந்திய வரைபடத்தினை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர். 

மாணவர்களின் இந்த சாதனை, சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இந்த நிகழ்வு பிகார் மாநிலத்தின் பக்ஸார் மாவட்டத்தில் உள்ள எம்.பி.உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அஸ்வினி சௌபி மற்றும் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மலையேற்ற வீராங்கனை சந்தோஷ் யாதவ் கலந்து கொண்டனர்.

இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி சௌபே கூறியதாவது: “ இது உலக சாதனை மற்றும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம். நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாட உள்ள நிலையில் மாணவர்களின் இந்த சாதனை மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.

பின்னர், மத்திய அமைச்சர் உலக சாதனைக்கான சான்றிதழை மாணவர்களுக்கு வழங்கினார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

ராஜஸ்தானில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய வெளிநாட்டவர்! வெளியேறுமாறு நோட்டீஸ்!

மேலை மெய்யியலுக்கு வழிகாட்டிய வள்ளுவம்

SCROLL FOR NEXT