இந்தியா

தில்லியில் மேலும் 2,162 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 2,162 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 2,162 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 5 போ் உயிரிழந்துள்ளனா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 12.64 சதவீதமாக பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் தொடா்ந்து 12-ஆவது நாளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,84,595-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,381-ஆக அதிகரித்தது.

நகரில் சனிக்கிழமை 2,031 பேருக்கு தொற்று பாதிப்பும், 9 இறப்புகளும், 12.34 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின. வெள்ளிக்கிழமை 2,136 பாதிப்புகளும், 6 இறப்புகளுடன் 15.02 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின.

நகரில் சனிக்கிழமை மொத்தம் 17,106 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT