முகப்பு
இந்தியா

கர்நாடகம்: சிவமொக்காவின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:04 AM
கோப்புப் படம்
பகிர்:

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.

கர்நாடகம் மாநிலத்தில் சிவமொக்காவில் திப்புசுல்தான் ஆதரவாளர்கள் சுதந்திர நாள் கொண்டாட்ட விழாவில் சவார்க்கரின் புகைப்படத்தினை கிழித்ததால் ஏற்பட்ட சண்டையில் கத்திக்குத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்து அமைப்பினை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் பிரேம் சிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

சிவமொக்கா மாவட்டத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் கூறியதாவது:

சிவமொக்காவில் ஒருவருக்கு கத்திக்குத்து நடந்தாக தகவல் வெளியாகியுள்ளது. சவார்க்கர் புகைப்படத்தினால் இந்த பிரச்சனை எழுந்ததாக தெரிகிறது. இன்னும் முழுமையான தகவல் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.