கோப்புப்படம் 
இந்தியா

இமாச்சலில் இந்தாண்டு பருவ மழைக்கு 205 பேர் பலி

இமாச்சலில் பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 205 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7 பேர் மாயமாகியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனர் தெரிவித்தார். 

PTI

இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து ஒன்றரை மாதத்திற்குள் இதுவரை 205 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7 பேர் மாயமாகியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனர் சுதேஷ் குமார் மோக்தா தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

ஜூன் 29 முதல் சேதமடைந்த சாலைகள், நீர் வழித்தடங்கள் மற்றும் மின்சாரம் என மாநிலத்திற்கு மொத்தம் ரூ.1,014.08 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

ஜூன் 29 முதல் ஆகஸ்ட் 16 வரை ஏற்பட்ட 35 விபத்துகளில் குறைந்தது 103 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மரம் மற்றும் பாறைகள் விழுந்ததில் 33 பேர் பலியாகினர். 

பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட 6 சம்பவங்களில் 25 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். 48 நிலச்சரிவுகளில் 7 பேர் இறந்துள்ளனர். மேலும் திடீர் வெள்ளத்தால் மூன்று பேர் உயிரிழந்தனர் என்றார். 

தவிர, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடர்பான சம்பவங்களில் 120 விலங்குகள் உயிரிழந்துள்ளன, 95 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன, 335 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று மோக்தா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம்! இபிஎஸ் விளக்கம்

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா வெளியீட்டுத் தேதி!

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

SCROLL FOR NEXT