இந்தியா

இமாச்சலில் இந்தாண்டு பருவ மழைக்கு 205 பேர் பலி

PTI

இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து ஒன்றரை மாதத்திற்குள் இதுவரை 205 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7 பேர் மாயமாகியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனர் சுதேஷ் குமார் மோக்தா தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

ஜூன் 29 முதல் சேதமடைந்த சாலைகள், நீர் வழித்தடங்கள் மற்றும் மின்சாரம் என மாநிலத்திற்கு மொத்தம் ரூ.1,014.08 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

ஜூன் 29 முதல் ஆகஸ்ட் 16 வரை ஏற்பட்ட 35 விபத்துகளில் குறைந்தது 103 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மரம் மற்றும் பாறைகள் விழுந்ததில் 33 பேர் பலியாகினர். 

பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட 6 சம்பவங்களில் 25 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். 48 நிலச்சரிவுகளில் 7 பேர் இறந்துள்ளனர். மேலும் திடீர் வெள்ளத்தால் மூன்று பேர் உயிரிழந்தனர் என்றார். 

தவிர, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடர்பான சம்பவங்களில் 120 விலங்குகள் உயிரிழந்துள்ளன, 95 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன, 335 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று மோக்தா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

SCROLL FOR NEXT