இந்தியா

பட்டப்பகலில் இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்(விடியோ)

DIN

பிகாரில் பட்டப்பகலில் இளம்பெண்ணை துப்பாக்கியால் இளைஞர் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா அருகேவுள்ள சிபாரா என்ற நெரிசல் மிகுந்த பகுதியில் நடந்து சென்ற இளம்பெண்ணை, அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில், கழுத்தில் பலத்த காயமடைந்த இளம்பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

காய்கறி வியாபாரியின் மகளான இளம்பெண், சுடப்பட்டதற்கான காரணம் காதல் விவகாரமாக இருக்கலாம் என பாட்னா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நெரிசல் மிகுந்த பகுதியில் இளம்பெண் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தப்பியோடிய இளைஞரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இச்சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT