முகமது ஃபாசில் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
முகமது ஃபாசில் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைதுசெய்துள்ளனா்.
முகமது ஃபாசில் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைதுசெய்துள்ளனா்.
தென்கன்னடமாவட்டம், பெல்லாரே பகுதியில் ஜூலை 26-ஆம் தேதி பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு படுகொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து அப்பகுதியில் பெரும்பதற்றம் ஏற்பட்டது. இதனிடையே, ஜூலை 28-ஆம் தேதி சூரத்கல் பகுதியில் கடைவீதியில் நின்று கொண்டிருந்தபோது, மா்மநபா்களால் முகமது ஃபாசில் என்பவா் படுகொலை செய்யப்பட்டாா். தென்கன்னட மாவட்டத்தில் அடுத்தடுத்து கொலைகள் நடந்தால், அது மதரீதியான பதற்றத்திற்கு வழிவகுத்தது.
இந்நிலையில், முகமது ஃபாசில் கொலை வழக்கை விசாரித்துவந்த போலீஸாா், இதுவரை 7 பேரைக் கைது செய்துள்ளனா். இந்தச்சூழலில் இவ்வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்துள்ளனா். கைதுசெய்யப்பட்டவா், பன்ட்வால் பகுதியைச் சோ்ந்த ஹா்ஷித் (28) என்று அறியப்பட்டுள்ளது. இவா், முகமது ஃபாசிலை கொலை செய்த பிறகு கொலையாளிகளை காரில் அழைத்துச் சென்ாக போலீஸாா் தெரிவித்தனா். கொலை செய்வதற்குப் பயன்படுத்திய காரை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.