இந்தியா

வங்கிப் பெட்டகத்தை நாளை ஆய்வு செய்யவிருக்கும் சிபிஐ: மணீஷ் சிசோடியா

PTI

புது தில்லி: சிபிஐ அதிகாரிகள் நாளை, எனது வங்கிப் பெட்டகத்தை ஆய்வு செய்யவிருக்கிறார்கள் என்றும், ஆனால் அதில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை என்றும் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

தில்லி அரசின் கலால் கொள்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக, தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ள சிபிஐ, சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31  இடங்களில் சோதனையும் நடத்தியிருந்தது.

இந்த நிலையில், நாளை, சிபிஐ அதிகாரிகள், எங்களது வங்கிப் பெட்டகங்களைத் திறந்து அதில் என்ன இருக்கிறது என்று ஆய்வு செய்யவிருக்கிறார்கள். கடந்த 19ஆம் தேதி எனது வீட்டில் 14 மணி நேரம் நடைபெற்ற மிக நீண்ட தேடுதலில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. நாளை வங்கிப் பெட்டகத்திலும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. சிபிஐ அதிகாரிகளை வரவேற்கிறேன்.

நானும் எனது குடும்பமும் இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்று துணை முதல்வர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT