அசாமில் ரூ. 15 கோடி மதிப்பிலான கஞ்சாவை போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அசாம் மாநிலத்தின் கரிம்கஞ்ச் பகுதியில் லாரி ஒன்றை சோதனை செய்தபோது ரப்பர் தாள்களுக்குக் கீழே 4,728 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின், உடனடியாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.
அண்டை மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட இந்த கஞ்சாவின் மதிப்பு ரூ. 15 கோடி.
மேலும், கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை. இச்சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.