இந்தியா

தில்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி!

DIN

தில்லி மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 126 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.

தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) 250 வாா்டுகளுக்கு கடந்த 4-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகளை எண்ணும் 42 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே இழுபறி நீடித்து வந்தது. ஆனால், கடைசி சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்திய ஆம் ஆத்மி கட்சி வெற்றிக்கு தேவையான 126 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.

பகல் 2 மணி நிலவரப்படி:

வெற்றி

ஆம் ஆத்மி 126
பாஜக 97
காங்கிரஸ் 7
சுயேட்சை 3

முன்னிலை

ஆம் ஆத்மி 8
பாஜக 6
காங்கிரஸ் 3

இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு தில்லி மாநகராட்சியை ஆம் ஆத்மியிடம் பாஜக இழந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT