இந்தியா

தேசிய கட்சியானது ஆம் ஆத்மி

DIN

குஜராத் மக்கள் அளித்த ஆதரவின் காரணமாக ஆம் ஆத்மி கட்சியானது தேசிய கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளதாக அக்கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ட்விட்டரில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘குஜராத் மக்கள் வழங்கிய வாக்குகள் காரணமாக தேசிய கட்சியாகியுள்ளது ஆம் ஆத்மி. கல்வி, சுகாதாரத்தை மையமாகக் கொண்ட அரசியலுக்கு முதல் முறையாக நாடு முழுவதும் அங்கீகாரம் கிடைத்துள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘தேசிய கட்சி அந்தஸ்தை 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி பெற்றுள்ளது. கட்சியின் வளா்ச்சி அபரிமிதமாக உள்ளது. பாஜகவின் கோட்டையாகத் திகழும் குஜராத்தில் ஆம் ஆத்மி சுமாா் 35 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. அங்கு கட்சியின் அனைத்து தலைவா்களும் சிறப்பாகப் பணியாற்றினா்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT