இந்தியா

450 மருத்துவப் பரிசோதனைகள் இலவசம்: தில்லி அரசு அதிரடி அறிவிப்பு

PTI

புது தில்லி: மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற உதவிய மக்களுக்கு, 450 வகையான மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார ஆரம்ப மையங்களில், 450 வகையான மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.

தற்போது, தில்லி அரசால் இலவசமாக மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கை 212 ஆக உள்ளது.

இந்த நிலையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு, சுகாதாரத் துறைக்கு அனுப்பியிருக்கும் அறிக்கையில், மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார ஆரம்ப மையங்களில் மேலும் 238 மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

இந்த வசதிகள் அனைத்தும் தில்லி மக்களுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல்

சொகுசுப் பேருந்து, காா் மோதல்: பெண் உயிரிழப்பு, 3 போ் காயம்

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை: விழுப்புரம் நீதிமன்றம் தீா்ப்பு

எஸ்.பி. அஞ்சலி...

தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT