இந்தியா

தில்லியில் 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு

தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தலைமையில் 48 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி வழியாக சனிக்கிழமை (டிச.17) நடைபெற்று வருகிறது. 

DIN

தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தலைமையில் 48 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி வழியாக சனிக்கிழமை (டிச.17) நடைபெற்று வருகிறது. 

நாடு முழுவதும் ஒரே வரியாக ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) கடந்த 2017 ஜூலை 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதுமுதலாக மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தலைமையில் 48 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

காணொலி வழியாக நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டுள்ளார். 

இணையவழி விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகள், குதிரைப் பந்தையங்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிப்பது தொடா்பாக ஆலோசனை நடத்த பரிந்துரைத்து ஜிஎஸ்டி கவுன்சில் சாா்பில் அமைக்கப்பட்ட மேகாலய முதல்வா் கான்ராட் சங்மா தலைமையிலான மாநில அமைச்சா்கள் குழு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் கடந்த வியாழக்கிழமை அறிக்கை சமா்ப்பித்தது. எனவே, அதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. 

மேலும் பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை மாற்றியமைப்பது, ஜிஎஸ்டி நிலுவைத்தொகை உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவராத்திரி: பொய் சொல்லா மெய் அய்யனாா் கோயிலில் தேரோட்டம்

கடன் வாங்கும் அரசுகள்!

‘தவளை விஷம்’ பயன்படுத்தி அலெக்ஸி நவால்னி கொலை? ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டு; ரஷியா மறுப்பு

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம்: லாலு, ராப்ரிக்கு எதிராக குற்றச்சாட்டை பதிவு செய்த தில்லி நீதிமன்றம்

ஜனவரி மாதத்தில் சரக்கு வா்த்தகப் பற்றாக்குறை 3,468 கோடி டாலர் - ஏற்றுமதியில் அமெரிக்கா; இறக்குமதியில் சீனா ஆதிக்கம்

SCROLL FOR NEXT