படம்: டிவிட்டர் 
இந்தியா

கடும் பனிமூட்டம்: சவாலுக்கு மத்தியில் எல்லைப் பாதுகாப்புப் படை!

இந்திய எல்லைகளில் சூழ்ந்திருக்கும் கடும் பனிமூட்டம், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு சவாலாக அமைந்துள்ளது.

DIN

இந்திய எல்லைகளில் சூழ்ந்திருக்கும் கடும் பனிமூட்டம், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு சவாலாக அமைந்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்த ஆண்டு குளிர்காலத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. காலை நேரங்களில் சாலைகளில் பனிமூட்டம் சூழ்வதால் பல்வேறு  நெடுஞ்சாலைகளில் கோர விபத்துகள் நிகழ்ந்து வருகின்றது.

இந்நிலையில், இந்திய - பாகிஸ்தான், இந்திய - சீன எல்லைகளில் கடுமையான பனிமூட்டமும், குளிரும் ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த சூழலை பயன்படுத்தி பாகிஸ்தான் பகுதிகளிலிருந்து டிரோன்கள் மூலம் போதைப் பொருள்களை அனுப்பும் செயல் அதிகரித்துள்ளது. இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கடந்த சில நாள்களில் அதிகளவிலான டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டரி-வாகா எல்லையில் 10 மீட்டர் தொலைவில் இருப்பவர்கள் கூட தெரியாத அளவிற்கு கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலை பயன்படுத்தி எல்லை தாண்டி தீவிரவாதிகள் ஊடுருவ அதிக வாய்ப்பிருப்பதால் ரோந்து பணிகளை எல்லை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்துக்கு கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள்: என்எம்சி அனுமதி

உரப் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

50,000 விவசாய மின்இணைப்புகள் வழங்க தமிழக அரசு ஒப்புதல்

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிரான மனு: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பிரதமா் மோடிக்கு இன்று 75-ஆவது பிறந்த நாள்- பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தொடக்கம்

SCROLL FOR NEXT