இந்தியா

வந்தே பாரத் ரயிலில் வருகிறது புதிய வசதி!

DIN

வந்தே பாரத்-3  ரயிலில்  படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

1950 மற்றும் 1960-களில் வடிவமைக்கப்பட்ட பழைய மின்சார ரயில்களுக்குப் பதிலாக வந்தே மெட்ரோ ரயில்களை இந்திய ரயில்வே தயாரித்து வருவதாக மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

"இந்த வந்தே மெட்ரோ ரயில்கள் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்படும். நாடு முழுவதும், 1950 மற்றும் 1960-களின் வடிவமைப்புகளில் இருந்த ரயில்கள் அனைத்தும் மாற்றப்படும்." என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வந்தே பாரத் ரயில்களைப் போலவே வந்தே மெட்ரோவும் இந்திய பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று வைஷ்ணவ் கூறினார்.

ரயிலின் வடிவமைப்பு மே-ஜூன் 2023-க்குள் முடிக்கப்படும். மேலும் முழுமையாக கட்டமைக்கப்பட்ட மற்றும் வடிவமைக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரயில் 2023 இல் வெளியிடப்படும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

வந்தே பாரத்-3  ரயில்  உருவாக்கும் பணியில் இந்திய ரயில்வே செயல்பட்டு வருகிறது.  இதில் படுக்கை வசதிகள் கொண்ட ரயில்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT