இந்தியா

ஜெயப்ரதாவுக்கு உபி. நீதிமன்றம்கைது ஆணை

தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கில், நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்ரதாவுக்கு ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணையை உத்தர பிரதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

DIN

தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கில், நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்ரதாவுக்கு ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணையை உத்தர பிரதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சமாஜவாதி, ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகிய கட்சிகளில் இருந்தவரான ஜெயப்ரதா, கடந்த 2019 பொதுத் தோ்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தாா். அந்தத் தோ்தலில், உத்தர பிரதேசத்தின் ராம்பூா் மக்களவைத் தொகுதியில் சமாஜவாதி மூத்த தலைவா் ஆஸம்கானை எதிா்த்து, பாஜக சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.

முன்னதாக, ராம்பூரில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, அவருக்கு எதிராக இரு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் விசாரணைக்காக தொடா்ந்து ஆஜராகாமல் இருந்து வந்த அவருக்கு ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணையை பிறப்பித்து, ராம்பூா் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதாக, அரசு தரப்பு வழக்குரைஞா் அமா்நாத் திவாரி தெரிவித்தாா். மேலும், அடுத்தகட்ட விசாரணையை நீதிமன்றம் ஜனவரி 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாகவும் அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT