இந்தியா

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இருப்பை உறுதி செய்யவேண்டும்: மத்திய சுகாதாரத்துறை 

DIN

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. 

சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் போதுமான அளவு இருப்பு இருப்பதை  உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. 

கரோனா 2-வது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதேநிலை உருவாகக்கூடாது என்பதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி, மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. 

அவர் எழுதிய கடிதத்தில் கூறியதாவது, 

ஆக்ஸிஜன் உருவாகும் ஆலைகள் முழுமையாகச் செயல்படுவதையும், அவற்றைச் சரிபார்க்க வழக்கமான மாதிரி பயிற்சிகள் நடத்தப்படுவதையும் கண்காணிக்க வேண்டும். 

போதுமான அளவு ஆக்சிஜன் கிடைப்பது உறுதி செய்ய வேண்டும். 

சுவாச கருவிகள், ஆக்சிஜன, வெண்டிலேட்டர்கள் போன்ற உபகரணங்கள் போதிய அளவில் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

ஆக்ஸிஜன் தொடர்பான பிரச்னைகள், சவால்களை உடனுக்குடன் தீர்க்க மாநிலங்கள் மற்றும்  யூனியன் பிரதேசங்களில் ஆக்ஸிஜன் கட்டுப்பாட்டு அறைகள் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT