எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் நிர்மலா சீதாராமன்
காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வீடு திரும்பினார்.
புது தில்லி: காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வீடு திரும்பினார்.
63 வயதாகும் பாஜக மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன், காய்ச்சல் மற்றும் வயிற்று உபாதை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிக்க.. நயாகரா நீர்வீழ்ச்சிக்கே இந்த நிலையா?
Advertisement
மருத்துவமனையில் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு நிர்மலா சீதாராமன் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் பலனாக அவர் குணமடைந்து இன்று வீடு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றிருந்தார். ஞாயிற்றுக்கிழமை முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்திலும் நிர்மலா சீதாராமன் மலரஞ்சலி செலுத்தினார்.