இந்தியா

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை: நிதிஷ் குமார்

2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிப்பதில் தனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

DIN

2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிப்பதில் தனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

பத்திரிகையாளர்களிடம் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசியதாவது: பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடப் போவதில்லை. பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கத் தயாராக உள்ளேன். காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியை 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதில் எனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்றார்.

முன்னதாக, வரும் மக்களவைத் தோ்தலில் ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளின் முகமாகவும் ஒருமித்த பிரதமா் வேட்பாளராகவும் ராகுல் காந்தி திகழ்வாா் என காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல் நாத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழுப்புரம்: ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஏலத்தில் பங்கேற்ற வியாபாரிகள்

என் நடிப்பின் மீது எனக்கு சந்தேகம் வந்துவிட்டது!: Kamal Hassan | Agaram foundation

சிபு சோரன் மறைவு: ஜார்க்கண்டில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு!

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற கூலித் தொழிலாளி

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

SCROLL FOR NEXT